close
Choose your channels

பிரசித்திப் பெற்ற கோவிலில் தரிசனம் செய்த விக்கி- நயன்தாரா ஜோடி… வைரல் புகைப்படம்!

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதும் இவர்கள் அவ்வபோது சுற்றுலா தளங்களுக்குச் செல்வதும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். இந்த நட்சத்திரக் காதலர்கள் தற்போது கேரளாவில் உள்ள ஒரு பிரசித்திப்பெற்ற கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியலுள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் ஏழாம் நாள் திருவிழாவையொட்டி மகம் நட்சத்திரத்தில் சுவாமி தரிசனம் செய்வதைப் பலரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர். அந்த அடிப்படையில் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குநர் விக்கி இருவரும் பல மணி நேரம் காத்திருந்திருந்து மகம் நட்சத்திரத்தில் நேற்று பகவதி அம்மனைத் தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் இதே வரிசையில் பிரபல நடிகர் ஜெய்ராமின் மனைவி பார்வதி ஜெயராமும் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது. நேற்றைய மகம் நட்சத்திரம் மதியம் 2-10 மணி வரை இருந்ததால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

இந்தத் தருணத்தில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளதைக் கேள்விபட்ட பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வரும்போது அங்கிருந்தவர்களைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்துவிட்டு திரும்பியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.