close
Choose your channels

இந்த சந்திப்பின் சந்தோஷத்தை கடவுள் மட்டுமே உணர முடியும்: விக்னேஷ் சிவன்

Tuesday, August 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக இந்த படத்தின் வசூல் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சனை போனில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'இந்த படத்தை பார்த்து சிரிச்சு சிரிச்சு என்ஜாய் பண்ணியதாக கூறியிருந்தார் என்பதை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் இன்று இயக்குனர் நெல்சனை நேரில் அழைத்து அவருக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கோலமாவு கோகிலா' படத்தின் டெக்னிக்கல் குழுவினர் அனைவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியபோது, 'நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மனதில் எந்த அளவுக்கு சந்தோஷம் இருந்திருக்கும் என்பதை கடவுள் மட்டுமே உணர முடியும். அத்தகைய சந்திப்பு இது என்றும் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாருடனான சந்திப்பு குறித்து இயக்குனர் நெல்சன் தனது சமுக வலைத்தளத்தில், 'இதுவொரு மறக்க முடியாத நிகழ்ச்சி என்றும், அவருடைய பாசிட்டிவ்வான வார்த்தைகள் அனைவருக்கும் ஊக்கத்தை கொடுத்தததாகவும் அவருக்கு தனது நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.