close
Choose your channels

விஜய் செய்யப் போகும் அதிசயம்-அற்புதம்: ரசிகர்களின் போஸ்ட்டரால் பரபரப்பு 

Sunday, November 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அளித்த பேட்டியின் போது ’2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிசயம் அற்புதம் நடக்கும் என்றும், அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தை அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டு வரிகளில் ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த அதிசயம் அற்புதம் குறித்த கருத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரமுகர்களும் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி கடந்த ஒரு வாரமாக அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் இதுகுறித்து விவாதங்கள்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரஜினி கமல் இணைந்து அரசியல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கூட்டணியில் விஜய்யும் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை விஜய் ரசிகர்கள் மதுரையின் முக்கிய பகுதிகளில் ஒரு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதில் 2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் நிகழப் போகும் அதிசயம், அற்புதத்தில் விஜய்யின் அரசியல் கால்தடமாகவும், நிலையான ஆட்சியாக இருக்கும் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் இணைந்தால் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு விடலாம் என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது. அந்த அதிசயம் அற்புதம் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.