close
Choose your channels

20 ஆண்டுகளுக்கு பின் நல்ல கதையில் நடிக்கிறேன்: தயாரிப்பாளரிடம் கூறிய தளபதி விஜய்!

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் என தளபதி விஜய் தன்னிடம் கூறியதாக 'தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படமே ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ படத்தை இயக்குனர் வம்சி இயக்க இருக்கவும் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ நேற்று அளித்த பேட்டியில்ம் 20 வருடங்களுக்கு பிறகு ’பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் என்று விஜய் தன்னிடம் கூறியதாகவும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கூறினார்.

மேலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தால் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.

தளபதி விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார் என்பதும் ஏற்கனவே அவர் பாடல்களை கம்போஸ் செய்யும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.