close
Choose your channels

ஓடிடிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்?

Friday, June 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் வேறு வழியின்றி ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே ஓடிடியில் ரிலீஸ் ஆகி விட்டன. அவற்றில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மேலும் சில படங்களும் ஓடிடியைநோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு இருந்தாலும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றும் 150 திரையரங்குகளுக்கும் குறைவாக ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பைப் பார்த்த அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் மூன்று மாதங்கள் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்றால் ‘மாஸ்டர், ‘சூரரை போற்று’ உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியை நோக்கி செல்லும் என்று கூறப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.