close
Choose your channels

நடிகர் ஆனந்த்ராஜை அலறவிட்ட 'கோப்ரா' டீம்!

Wednesday, August 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் இந்த படம் விக்ரமின் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் படக்குழுவினர் நடிகர் ஆனந்தராஜை அலறவிட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. ‘கோப்ரா’ படக்குழுவினர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்தப் படத்தின் டப்பிங் போது நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஆனந்தராஜ் டப்பிங் செய்ய வந்தபோது ’எந்த படத்திற்கும் நான் ஒன்று அல்லது இரண்டு நாளில் டப்பிங் பேசி முடித்து விடுவேன் என்று கூறி வந்ததாகவும் ஆனால் அவரை 12 நாட்களுக்கு மேல் டப்பிங் செய்ய வைத்து விட்டோம் என்றும் அஜய் ஞானமுத்து கூறினார்.

அது மட்டுமின்றி விக்ரமுடன் இணைந்து அவர் மீண்டும் டப்பிங் செய்ய வேண்டும் என்று கூறியபோது அலறிவிட்டார் என்றும் இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில் இதுபோன்று நான் எந்த படத்திற்கும் டப்பிங் செய்யவில்லை என்றும் அவர் காமெடியாக கூறியதாகவும் விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து கூறியுள்ளனர். மொத்தத்தில் இந்த படத்தில் டப்பிங்கின் போது நடிகர் ஆனந்தராஜை படக்குழுவினர் அலற வைத்துவிட்டனர் இந்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.