close
Choose your channels

விவசாயிகள் பிரச்சனை: கருத்து சுதந்திரம் குறித்து விராத் கோஹ்லியின் கருத்து!

Thursday, February 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத திரைஉலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாப் பாடகி ரிஹானாவின் டுவீட்டிற்கு பின்னர் பொங்கி எழுந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இதனை அடுத்து ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகத் தான் கிரிக்கெட் வீரர்களும் திரையுலக பிரபலங்களும் டுவிட்டரில் தற்போது கருத்துக்களை பகிர்ந்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து விராத் கோலி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்

அதில் ’ஒவ்வொரு வீரரும் அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதைத்தான் டுவிட் செய்து இருக்கிறார்கள் என்றும் அவரவர் கருத்தை சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலையில் கூட நாங்கள் அணி தொடர்பான கூட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசினோம் என்றும் அதற்குப் பிறகுதான் நாளைய டெஸ்ட் குறித்த வியூகங்கள் பற்றி பேசினோம் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்

வழக்கம்போல் விராட் கோலியின் இந்த கருத்துக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.