close
Choose your channels

'மாநாடு 2' என எஸ்.ஜே.சூர்யா வர்ணித்த விஷால் படம்: லேட்டஸ்ட் அப்டேட்!

Monday, April 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா அடுத்து விஷாலுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அந்த படத்தை ’மாநாடு 2’ என்று சொல்லலாம் என்றும் அந்த அளவுக்கு அருமையான கதை என்றும் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இணையும் இந்த படத்திற்கு ’மார்க் ஆண்டனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . மினி ஸ்டுடியோஸ் வினோத் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.