close
Choose your channels

விபத்தில் இறந்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு விஷால் உதவி

Saturday, August 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் ஓட்டி வந்த கார் ஒன்று தொழிலாளி முனுசாமி என்பவரது மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் என்ற செய்தியை அனைவரும் படித்திருப்போம்.
இந்நிலையில் தொழிலாளி முனுசாமி அவர்களின் குடும்பம் தற்போது வறுமையால் வாடி வருவதாகவும், அவருடைய இரண்டு குழந்தைகளான ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அந்த குடும்பமே திக்கிலாமல் இருந்தாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.
இந்த செய்தியை பார்த்த நடிகர் விஷால் உடனே ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோர்களது முழு கல்விச்செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும் பள்ளி முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பும் படிப்புக்கு தேவையான அனைத்து செலவையும் விஷால் தேவி அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் விஷால் தற்போது நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தில் பணிபுரியும் போட்டோ பிளேட் செல்வம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். வறுமையில் வாடும் அவரது மகன்கள் ஆகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர்களின் முழு கல்விச்செலவையும் தேவி அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த உதவியால் திக்கற்று நின்ற குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.