close
Choose your channels

பாலக்காடு துணை கலெக்டருடன் விஜய் ஆலோசனை

Saturday, August 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாலக்காடு துணை கலெக்டர் அட்டப்பாடி என்ற பின்தங்கிய கிராமத்திற்கு சென்றதாகவும், அங்கு கழிவறை உள்பட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையிலும் அந்த கிராமத்து இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக இருந்ததாகவும் வெளிவந்த செய்தியினை பார்த்தோம். மேலும் விஜய் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட துணைகலெக்டர், அந்த கிராமத்திற்கு விஜய் வருகை தந்தால், அக்கிராம மக்களிடம் கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்நிலையில் இன்று பாலக்காடு துணை கலெக்டரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதன் மூலம் விரைவில் விஜய் அட்டப்பாடி கிராமத்திற்கு செல்லும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களை தருவது மட்டுமின்றி நடிகர்களால் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த சந்திப்பு நல்ல உதாரணமாக கருதப்படுகிறது. விஜய்யால் ஒரு கிராமமே விமோசனம் ஆகப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.