close
Choose your channels

விஷால்-ராதாரவி சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்

Tuesday, May 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின்போது அரசியல்வாதிகளுக்கு இணையாக போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ததை பார்த்தோம். ராதாரவி உள்பட ஒருசில நடிகர்கள் தங்கள் போட்டியாளர்களை ஒருமையில் பேசிய சம்பவங்களும் நடந்தது.

இந்நிலையில் செயலாளர் பதவிக்கு நேருக்கு நேராக மோதிய ராதாரவியும் விஷாலும் தேர்தலின்போது நடந்து கொண்ட விதத்தை பார்த்து இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் கருதப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி விஷால் தனது அடுத்த படத்திலேயே ராதாரவியை நடிக்க வைத்தார்.

'மருது' படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் காட்சியின் படப்பிடிப்பின்போது என்ன நடக்கும் என்று படக்குழுவினர் அனைவரும் பதபதப்போடு இருந்த நிலையில் 'தேர்தல் வேறு' தொழில் வேறு என்பதை விஷாலும் ராதாரவியும் நடைமுறையில் உறுதிப்படுத்தினர்.

ஆனால் இந்த படப்பிடிப்பில் விஷால் ராதாரவியை நோக்கி பேசிய ஒரு வசனம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம். அந்த வசனம் என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று விஷால் கூறியுள்ளார். அந்த வசனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வரும் 20ஆம் தேதி வரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.