close
Choose your channels

சைக்கிளில் வந்ததன் காரணம் என்ன? விஜய் தரப்பு விளக்கம்!

Tuesday, April 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்கள் பலர் வாக்களித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக தளபதி விஜய் இன்று தனது நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் என்பது குறித்த வாத விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பதும் பெட்ரோல் விலை உயர்வை குறிப்பதற்காகவே அவர் சைக்கிளில் வந்ததாகவும், லாக்டவுனின் போது பலர் நடந்து சென்றதை குறிப்பிடுவதற்காக என்றும் சிலர் கூறியது மேலும் பரபரப்பை அதிகரித்தது.

இந்த நிலையில் விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் சைக்கிளில் வந்ததற்கு காரணம் அவர் வீட்டுக்கு அருகிலேயே பூத் இருந்தது என்பதும், அதுமட்டுமின்றி பூத் இருக்கும் இடம் சின்ன சந்து என்பதால் அங்கு காரை நிறுத்த முடியாது என்பதும் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து விஜய் சைக்கிளில் வந்ததற்கான காரணம் குறித்து பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.