close
Choose your channels

கணவனின் கள்ளக்காதலி வீட்டிற்குள் நுழைந்து செருப்படி கொடுத்த மனைவி

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது தெரிந்தவுடன் கணவரின் கள்ளக்காதலி வீட்டில் புகுந்து கள்ளக்காதலியையும் கணவனையும் சரமாரியாக அடித்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜனா என்பவருக்கும் லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை சகஜமாக சென்று கொண்டிருந்தபோது லட்சுமணன் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி சென்று தாங்குவதாகவும் சுஜனாவுக்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜனா தனது கணவருக்கு அன்புடன் அறிவுரை கூறி பார்த்தார். ஆனால் அறிவுரை கணவரிடம் எடுபடாததால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதற்கும் கணவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லாததால் கோபமடைந்த ஒருகட்டத்தில் தனது உறவினர்களுடன் கணவனின் கள்ளக்காதலை சுஜானா, கணவனின் கள்ளக்காதலி வீட்டுக்குள் அதிரடியாக உறவினர்களுடன் நுழைந்தார்

அந்த வீட்டில் இருந்த கணவரையும் கணவரின் காதலியையும் சரமாரியாக செருப்பால் அடித்து தாக்கினார். மேலும் கணவனின் கள்ளக்காதலியை தரதரவென்று வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையிலும் செருப்பால் அடித்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். லட்சுமணனனின் கள்ளக்காதலி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.