close
Choose your channels

மக்களின் மனதை வெல்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது. ஒருவழியாக கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது மெளனத்தை கலைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் 15 தினங்களுக்குள் அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

இன்று பதவியேற்றவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும்போது, துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தமிழக மக்கள் கவலையுடன் பார்த்து கொண்டுதான் இருந்தனர். முதலமைச்சர் பழனிச்சாமிதான் என்றாலும் அவர் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுவார் என்பதையும், சசிகலாவின் உறவினர்களின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அதே நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகத்தான் கூறப்படுகிறது. ஏனெனில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்திற்கு வராமல் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 124 பேர்களில் 8 பேர்களை ஓபிஎஸ் தன்பக்கம் இழுப்பது பெரிய விஷயமில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் கமிஷன் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பேற்றது குறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் இன்றைய ஆட்சிக்கு பாதகம்தான். தமிழகத்தில் முதன்முறையாக மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறான ஒரு ஆட்சி அமைந்துள்ளதாகவே கூறப்பட்டு வரும் நிலையில், மக்களின் நம்பிக்கையை பெறவும் அவர்களின் மனதில் இடம்பெறவும் புதிய அரசு என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்துதான் இந்த ஆட்சி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.