ஓடும் காரில் பிறந்த குழந்தைக்கு 5 வருட இலவச பயண சலுகை

  • IndiaGlitz, [Friday,October 06 2017]

தனியார் கேப் நிறுவனத்தின் கார் ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென பிரசவ வலி வந்து காரிலேயே குழந்தை பிறந்ததால், தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் ஐந்து வருட இலவச பயணம் செய்ய அந்நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.

புனேவை சேர்ந்த ஈஸ்வரி சிங் என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு அக்டோபர் 24ஆம் தேதி குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதியே திடீரென ஈஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக ஈஸ்வரியின் கணவர் தனியார் நிறுவனத்தின் கேப் ஒன்றில் கார் புக் செய்தார். 

காரில் ஈஸ்வரி மற்றும் அவருடைய உறவினர்கள் செல்ல, ஈஸ்வரியின் கணவர் பைக்கில் சென்றார். இந்த நிலையில் ஐந்து நிமிட பயணத்திற்கு பின் காரிலேயே ஈஸ்வரிக்கு குழந்தை பிறந்தது. இதன்பின்னர் கார் மருத்துவமனைக்கு சென்று, ஈஸ்வரிக்கும் அவருடைய குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

இந்த நிலையில் தங்களது நிறுவனத்தின் காரில் பிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் ஐந்து வருட இலவச பயணம் செய்யும் கூப்பன் வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குழந்தைக்கு பெயர் வைத்தவுடன் பெயருடன் கூடிய சலுகை கூப்பன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பயணத்தின் போது காரை ஓட்டிய டிரைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

பெண் சாமியாருக்கு இருக்கை கொடுத்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா சமிபத்தில் டெல்லியில் உள்ள விவேக்விஹார் காவல்நிலையத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு தனது இருக்கையை காவல்நிலையத்தின் அதிகாரி சஞ்சய் ஷர்மா தந்தது

சசிகலாவுக்கு 5 நாள் பரோல். இன்று மாலை சென்னை வருகிறார்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளதாகவும்

திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஏ.எம்.ரத்னம் மருமகள்

ஏ.எம்.ரத்னம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி ஐஸ்வர்யா பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபிராஜ்

சத்யராஜ் மகனும், இளையதலைமுறை நடிகர்களில் ஒருவருமான சிபிராஜ் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz சார்பில் அவருக்கு எங்களது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தளபதியின் 'மெர்சலுக்கு புகழாரம் சூட்டிய பிரமாண்ட இயக்குனர்

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி விஜய்யின் 'மெர்சல்' படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று வாழ்த்துக்கள் கூறி அந்த படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்