close
Choose your channels

திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஏ.எம்.ரத்னம் மருமகள்

Friday, October 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை வாரிசுகள் உருவாகி அவர்களும் வெற்றிக்கொடி நாட்டி வரும் நிலையில் அஜித்தின் 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' 'வேதாளம்' உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டில் இருந்தும் ஒருவர் தற்போது திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்

ஏ.எம்.ரத்னம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி ஐஸ்வர்யா பாடகியாக அறிமுகமாகியுள்ளார். ஐஸ்வர்யா பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதே படத்தில் நடிகை ரம்யா நம்பீசனும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கூத்தன், தெலுங்கில் ஆக்சிஜன் என்ற பெயர்களில் தயாராகி வரும் இந்த படத்தை நீல்கிரிஸ் முருகன், தன்னுடைய மகன் ராஜ்குமாரை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரித்து வருகிறார். ஏ.வெங்கி இயக்கி வரும் இந்த படத்திற்கு பாலாஸ் என்பவர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நாகேந்திர பிரசாத் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.