close
Choose your channels

தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூதாட்டி… உயிரோடு இருந்ததால் அதிர்ந்துபோன உறவினர்கள்!

Friday, January 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அர்ஜெண்டினாவில் மூதாட்டி ஒருவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடலை மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்த உறவினர்கள் தகன மேடைக்கு அருகில் வைத்து இறப்பு சடங்கை செய்து இருக்கின்றனர். இந்நிலையில் அந்த மூதாட்டி உயிரோடு இருப்பதை அவரது மகள் கவனித்து உள்ளார். இத்தகவலை மற்றவர்களிடம் தெரிவிக்க, உடனே அந்த மூதாட்டி வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

ரெஸிஸ்டென்சியா எனும் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த 89 வயது மூதாட்டி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அவரது உடலை தகன மேடைக்கு உறவினர்கள் கொண்டு சென்றபோது உயிருடன் இருப்பது தெரிந்து இருக்கிறது. இதனால் பதறிப்போன உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டி உயிருடன் இருப்பது உறுதிச் செய்யயப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் இறந்து விட்டதாகக் கூறி இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பலரும் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர். மேலும் மூதாட்டி உறவினர்கள் தொடர்ந்து உள்ள வழக்கில் இறப்புச் சான்றிதழ் கொடுக்கப் பட்டதற்கான விளக்கம் கோரப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.