close
Choose your channels

சொந்த கிராமத்திற்காக 'யார்க்கர்' நடராஜன் செய்த மகத்தான உதவி!

Wednesday, December 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொந்த கிராமத்தின் இளைஞர்களுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன் செய்த மகத்தான செயல் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பதும், அவர் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடராஜன் தனது சொந்த கிராமத்தின் இளைஞர்களுக்காக தனது செலவில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணியில் நான் அறிமுகமானேன் என்றும் இந்த ஆண்டு எனது சொந்த கிராம மக்களுக்காக ஒரு கிரிக்கெட் மைதானத்தை ஏற்பாடு செய்துள்ளேன் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சொந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் மூலம் தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த செலவில் கிரிக்கெட் மைதானத்தை ஏற்பாடு செய்துள்ள நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.