close
Choose your channels

முதலிரவிலேயே சந்தேகம் அடைந்த கணவர்: அதிர்ச்சியில் தீக்குளித்த மணப்பெண்

Wednesday, September 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலிரவிலேயே சந்தேகமடைந்த கணவனால் அதிர்ச்சி அடைந்த புதுமணப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திரலேகா. இவருக்கும் பாலாஜி என்பவருக்கும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தன்று முதலிரவு அறைக்கு ஏகப்பட்ட கனவுகளுடன் சென்ற சந்திரலேகா, கணவர் பாலாஜி அடுத்தடுத்து கேட்ட கேள்வியால் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதுவரை யாரையாவது காதலித்தாயா? உன்னை யாராவது காதலித்தார்களா? என்னை விட்டுவிட்டு காதலித்த பையனுடன் ஓடிவிடுவாயா? என்று அடுத்தடுத்து சந்தேகப்படும்படியான கேள்வியை கேட்டுள்ளார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் முதலிரவிலேயே சந்தேகப்படும் கணவனுடன் தன்னால் இனி வாழ முடியாது என்றும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு குளியலறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த கடிதத்தில் தங்கைகளுக்காவது நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று சந்திரலேகா கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கடிதத்தைப் பார்த்த சந்திரலேகாவின் பெற்றோர்கள் அதனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். முதலிரவு அன்றே சந்தேகம் அடைந்த கணவரால், புதுமணப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos