close
Choose your channels

அக்காவை காதலித்துவிட்டு மூன்று தங்கைகளை கர்ப்பமாக்கிய கில்லாடி இளைஞர்

Wednesday, May 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேலத்தில் காதலித்த பெண்ணின் தங்கைகள் மூன்று  பேரை கர்ப்பமாக்கிய இளைஞர் தலைமறைவாகியுள்ளார். 

நாமக்கல் மாவட்டம், குமரபாளையத்தை சேர்ந்த, இளம்பெண் ஒருவர் சேலம் கொளத்தூரை சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் கார்த்தி காதலித்த பெண்ணின் சொந்த  தங்கையுடன் பழகி உள்ளார். இதனை பலமுறை அவர் கண்டித்தும் கார்த்தி, காதலியின் சகோதரி  இளவரசியுடன் பழகுவதை நிறுத்தி கொள்ளவில்லை. ஒரு நிலையில் இருவரும் அத்துமீறி பழகியதில் இளவரசி கர்ப்பமாக ஆகி உள்ளார்.    

இதனால், காதலன் கார்த்திக்கும் சகோதரி இளவரசிக்கும் திருமணம் செய்து வைத்தார் அந்த பெண்.  திருமணமான சில நாட்களிலேயே கார்த்தி தலைமறைவானார். 

அவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர் குடும்பத்தினர். பின் உறவினர் ஒருவர் மூலம், கார்த்தி திருப்பூரில் இளவரசியின் பெரியம்மா மகளும், சகோதரியுமான ஒருவரை, திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது அவரும் கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் கார்த்தி மீது இளவரசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய அக்காவை  காதலித்துவிட்டு தன்னிடம் பழகி தன்னை கர்ப்பமாக்கியது மற்றும் இன்றி, தன்னுடைய தங்கையையும் ஏமாற்றி கர்ப்பமாக்கி, அந்த கர்ப்பத்தை தங்களுக்கு தெரியாமல் கலைத்துள்ளார் கார்த்தி. 

மேலும் தன்னுடைய பெரியம்மா மகளுடன்  யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு  தலைமறைவாகியதாகவும், அவரும் இப்போது கர்ப்பமாக உள்ளதாக புகார் மனுவில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள, கார்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.