close
Choose your channels

பிக்பாஸ் விவகாரம்: சறுக்கியது ஜூலி மட்டுமா?

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பட வாய்ப்புகள் இல்லாமல் ஓரமாக இருந்த ஓவியாவை அழைத்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்த அந்த தொலைக்காட்சி, தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் புகழ் காரணமாக லேசாக அதிர்ச்சி அடைந்துள்ளதோ என்று எண்ண தோன்றும் அளவுக்கு நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது.

ஜூலி செய்த துரோகத்தை ஓவியா வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார். அட்லீஸ்ட் மனம் திருந்தி சாரி கேட்கும் பக்குவம் கூட இல்லாத ஜூலியை, ஓவியாவே மன்னிதாலும், நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் மறக்க மாட்டார்கள். இந்த நிலையில் தராதரமே இல்லாமல், மற்ற நிகழ்ச்சியில் ஜட்ஜூகளை நியமிப்பது போல் எந்த தகுதியும் இல்லாத ஜூலிக்கு சமையல் போட்டியின் நடுவர் பட்டத்தை கொடுத்ததில் இருந்தே ஸ்கிரிப்ட் திசை மாறுகிறது என்பதை சாமானியர்கள் கூட புரிந்து கொள்வார்கள்.

தனக்கு இருந்த ஓரே ஆதரவாளரான காயத்ரியையும் ஓவியாவால் இழந்ததால் ஜுலிக்கு பழிவாங்க கிடைத்த ஒரே சந்தர்ப்பம் என்ற வகையில் இந்த நடுவர் பட்டத்தை பயன்படுத்தி கொண்ட ஜூலி, எதிர்பார்த்தது போலவே ஓவியா டீம் சமைத்த முட்டை மசாலா சரியில்லை என்று கூறி சக்தி டீமை வெற்றியாளராக அறிவித்தார்.

இதனால் ஓவியா டீம், ஜூலிக்கு ரெட் கார்ப்பேட் விரிக்க வேண்டும், அவர் கேட்டதை எல்லாம் சமைத்து தர வேண்டும், எப்போதும் கூடவே ஒரு பாடிகார்டு இருக்க வேண்டும், அவருக்கு மசாஜ் செய்ய வேண்டும். இந்த டாஸ்க்கில் இது ரொம்ப ஓவர் என்று கருதப்பட்ட நிலையில் தான் ரெட் கார்ப்பேட் விரிக்க ஓவியாவை தேர்வு செய்தார் ஜூலி.

துரோகம் செய்த வில்லனுக்கு ஹீரோ ரெட் கார்ப்பெட் விரிக்கும் காட்சி சினிமாவில் வந்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? அதேதான் இந்த நிகழ்ச்சியிலும் நடந்தது. தன்னை அவமதித்த ஜூலியை மட்டுமின்றி தனக்கு இப்படி ஒரு டாஸ்க் கொடுத்த சேனலுக்கும் பாகம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த ஓவியா, ஜூலி ரெட் கார்ப்பெட்டில் ஏறுவதற்கு முன்பாகவே ரெட் கார்ப்பெட்டை இழுக்க, ஜூலி தடுமாறி கீழே விழுந்தார். இதை பார்த்து மற்ற பங்கேற்பாள்ர்கள் அதிர்ச்சி அடைந்தார்களா? அல்லது அதிர்ச்சி அடைந்தது போல் வழக்கம் போல் நடித்தார்களா? என்பதி தெரியவில்லை, ஆனால் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த நேயர்கள் கைதட்டி மகிழ்ச்சி அடைந்தனர். ஜூலி செய்வதறியாது திகைத்து நிற்க, 'இன்னும் வேறெங்க போகணும்' என்று கெத்து காட்டிய ஓவியாவை பங்கேற்பாளர்கள் வேண்டுமானாலும் வில்லியாக பார்க்கலாம், ஆனால் பார்வையாளர்கள் அந்த இடத்தில் ஓவியாவை ஜான்சி ராணியாகத்தான் பார்த்தார்கள்.

இந்த சம்பவம் மூலம் ஓவியாவுக்கு கெட்ட பெயரை வரவழைக்கலாம் என்று சேனல் நினைத்தாலும் சரி, ஜூலி நினைத்தாலும் சரி அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லும் வகையில்தான் உண்மையான நிலைமை உள்ளது. ஓவியாவின் சறுக்கல் நாடகத்திற்கு இன்று கமல் ஒருவேளை கண்டிக்கலாம், அல்லது கண்டிக்கப்பட வேண்டிய ஜூலியையும், காயத்ரியையும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்தது போல இதையும் கண்டுகொள்ளாமல் விடலாம். மொத்தத்தில் ரெட்கார்ப்பெட் விவகாரத்தில் சறுக்கியது ஜூலி மட்டுமே இல்லை மற்றவர்களுமா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.