close
Choose your channels

ஓவியாவை மருமகளாக ஏற்று கொண்டாரா ஆரவ் அம்மா?

Saturday, August 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டவர் ஓவியா. அவரது புற அழகை காட்டிலும் அவரது அக அழகு, உண்மை, கள்ளங்கபடம் இல்லா சிரிப்பு ஆகியவை காரணமாக ஒவ்வொருவரும் அவரை தனது குடும்பத்தின் ஒரு உறுப்பினர் போல் நேசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் தான் இன்னும் ஆரவ்வை காதலிப்பதாக ஓவியா கூறியிருந்தார். அதேபோல் ஆரவ்வின் அம்மாவும் ஓவியாவை தனது மருமகளாக ஏற்று கொண்டதாகவும், ஆரவ் விருப்பப்பட்டால் ஓவியாவையே தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த செய்தியை ஆரவ் அண்ணன் மறுத்துள்ளார். இதுகுறித்து ஆரவ்வின் அண்ணன் நதீம் கூறியபோது, "இந்த செய்தி, முற்றிலும் வதந்தி. அம்மா யாரிடமும் அப்படிக் கூறவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. யாரோ எங்கள் அம்மா கூறியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி இருக்கின்றனர்'' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.