close
Choose your channels

இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை. பார்த்திபனின் வருத்தமான பதிவு

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் 'நம்ம அணி' அமோகமாக வெற்றி பெற்று வரும் 6ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் நிர்வாக கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.பார்த்திபன் ஆடியோ செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் நண்பர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு வருத்தமான பதிவு. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. வாக்காளர்களின் நேர்மைக்காக சொல்கின்றேன். இந்த தேர்தலில் தனிப்பட்ட முறையில் நான் யாரிடமும் ஒரு வாக்குகூட கேட்கவில்லை. அப்படி இருந்தும் எனக்கு 501 வாக்குகள் கிடைத்துள்ளது. இது ஒன்றும் அரசியல் தேர்தல் அல்ல. இந்த சங்கத்தில் அங்கம் வகிக்க தங்கம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

லஞ்ச லாவண்யத்தின் மூலம் பதவியேற்பதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை. நாம் தூய்மையாக இருந்தால்தான் நம்மிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை எதிர்க்கும் துணிச்சல் வரும். சினிமாவின் மூலமாக அரசியலை எதிர்க்கும் தைரியமும் நமக்கு வரும். இனி அது நடக்கும். இவ்வாறு பார்த்திபன் தனது ஆடியோ செய்தியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.