close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ராகவா லாரன்ஸின் அன்புக்கோரிக்கை

Monday, February 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கோலிவுட்டில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வது, இதய நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.
மேலும் ராகவா லாரன்ஸ் தாயிடம் மிக அதிகமான பாசம் கொண்டவர். பெற்ற தாயை கடவுளுக்கு இணையாக கருதுவதோடு, அவருக்காக ஒரு கோவிலையும் கட்டி வருகிறார். இந்த கோயில் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த கோவிலை திறந்து வைக்க வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் அன்புக்கோரிக்கை வைத்து வைத்துள்ளதாகவும் இதற்கு ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. நடிப்பு மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டுக்கும் ரஜினியை குருவாக ஏற்றுக்கொண்டவர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.