close
Choose your channels

சட்டமன்ற தேர்தலை குறிவைக்கும் பாபிசிம்ஹா

Wednesday, April 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாபிசிம்ஹா நடித்த 'கோ 2' திரைப்படத்தில் தற்கால அரசியல், டாஸ்மாக், வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த படத்தை தேர்தலுக்கு முன்னர் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை விறுவிறுப்புடன் செய்து வருகின்றன. இந்நிலையில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் அதிகம் அடங்கிய 'கோ 2' திரைப்படம் வெளிவந்தால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் முதல்வரையே கடத்தும் கதை என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
பாபிசிம்ஹா, நிக்கிகல்ராணி, நாசர், கருணாகரன், மயில்சாமி, ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சரத் இயக்கியுள்ளார். எல்ட்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.