close
Choose your channels

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் என்ன ஆச்சு?

Tuesday, May 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்தன. சமீபத்தில் கூட தனுஷ், இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பிரபுதேவாவிடம் ஒரு கதையை கூறியுள்ளதாகவும், அந்த கதையால் இம்ப்ரஸ் ஆன பிரபுதேவா அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதுகுறித்த ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகியாக கன்னட நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த கதையும், பிரபுதேவா நடிக்கவுள்ள கதையும் ஒன்றா? அல்லது வெவ்வேறா?, தனுஷ் -கார்த்திக் சுப்புராஜ் படம் என்ன ஆச்சு போன்ற கேள்விகளுக்கு விரைவில் விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.