close
Choose your channels

பிரமாண்ட இயக்குனரை பாராட்டிய பிரமாண்ட இயக்குனர்

Tuesday, May 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் தென்னிந்தியாவின் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் ஷங்கர் ஆகிய இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களுடைய படங்கள் வெளிவரும்போது அந்த படத்தின் நாயகர்களை விட இவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்.

எஸ்.எஸ்.ராஜமெளலி டெக்னாலாஜியை சரித்திர பின்னணியில் பயன்படுத்தி வருபவர் என்றால், ஷங்கர் அதே டெக்னாலஜியை விஞ்ஞானபூர்வ கதைகளில் பயன்படுத்தி வருபவர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பாகுபலி 2' படத்திற்கு ஷங்கர் தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார். 'பாகுபலி 2' இந்திய சினிமாவுக்கே ஒரு பெருமை. என்ன ஒரு துணிச்சலான, அழகான அற்புதமான காட்சி அமைப்புகள் மற்றும் இசை. ராஜமெளலி மற்றும் அவரது டீமுக்கு பாராட்டுக்கள்' என்று தெரிவித்துள்ளார். ஒரு பிரமாண்ட இயக்குனரின் படத்தை இன்னொரு பிரமாண்ட இயக்குனர் பாராட்டுவது இந்திய சினிமாவின் ஆரோக்கியத்திற்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.