close
Choose your channels

கூடாரத்தை ஒரேயொரு அறிவிப்பில் காலி செய்த கருணாஸ்

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ், சசிகலா அணிக்கு ஆதரவு கொடுத்து வந்தார்.
இந்நிலையில் தனது 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி கருணாஸ் உத்தரவிட்டுள்ளாராம். இதுவரை நிர்வாகிகளாக இருந்தவர்கள் அனைவரும் அதிகாரபூர்வ அனுமதிக் கடிதம் இன்றிச் செயல்பட்டதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படையின் புதிய, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். பதவிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் கருணாஸ் தலைமையை விரும்பவில்லை என்று கூறியதாகவும், அதன் காரணமாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.