close
Choose your channels

என்னையும் விஜய்யையும் இணைத்து இயக்க தகுதியுள்ள ஒரே இயக்குனர் இவர்தான். மகேஷ்பாபு

Thursday, April 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய். அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தமிழக ஜனத்தொகையில் ஒரு பெரிய சதவிகிதம். அதேபோல் தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் மகேஷ்பாபு. இந்த இரண்டு பெரிய ஸ்டார்களும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? அந்த படத்தின் கலெக்சன் எவ்வளவு வரும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இந்நிலையில் விஜய், மகேஷ்பாபு இருவரையும் இணைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ராஜராஜசோழன், வந்தியத்தேவன் ஆகிய கேரக்டர்களில் இருவரையும் நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்ட நிலையில் அந்த படம் எதிர்பாராத காரணத்தால் நின்றுவிட்டது

இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் விஜய், மகேஷ்பாபு இருவரையும் இணைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு மகேஷ்பாபுவே பேட்டி ஒன்றில் பதில் கூறியுள்ளார். அவர் கூறியது இதுதான்: நானும் விஜய்யும் சேர்ந்து நடிக்கணும்னா, கதை ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் எங்களை ஹேண்டில் பண்ணக்கூடிய இயக்குநர். எனக்குத் தெரிஞ்சு அப்படி ஓர் இயக்குநர் இப்போ ஏ.ஆர்.முருகதாஸ் சார்தான்” என்று கூறியுள்ளார். எனவே எதிர்காலத்தில் விஜய்-மகேஷ்பாபு இணையும் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று நம்புவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.