close
Choose your channels

சென்னை காசியில் 'மெர்சல்' கொண்டாட்டம் ஆரம்பம்

Tuesday, October 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ரசிகர்கள் மற்றும் செலிபிரிட்டிகளின் விருப்பத்திற்குரிய திரையரங்கான காசி திரையரங்கில் 'மெர்சல்' திரைப்படம் எதிர்பாராத காரணமாக திரையிடப்படும் வாய்ப்பு இல்லை என்று திரையரங்கின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் தியேட்டர் நிர்வாகமும் 'மெர்சல்' தயாரிப்பு நிர்வாகமும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போது காசி திரையரங்கில் 'மெர்சல்' திரையிடப்படுவது உறுதியாகிவிட்டது.

இதனையடுத்து சற்றுமுன் தொடங்கிய முன்பதிவு ஒருசில நிமிடங்களில் முதல் நாளின் ஐந்து காட்சிகளுக்கான டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்தன. எனவே நாளை காலை எட்டு மணிக்கு முதல் காட்சியின்போது காசியில் மெர்சல் கொண்டாட்டம் ஆரம்பமாவது உறுதியாகிவிட்டதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.