close
Choose your channels

ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஓவியாவின் ஒற்றை வரி

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட ஓவியாவுக்கு ஆதரவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு டுவிட்டர் பதிவுக்கு முன்னணி நடிகர்களின் பதிவுகளை விட அதிக வரவேற்பு இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ஒரு பதிவை ஓவியா வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும், வீட்டை விட்டு வெளியே வந்தபின்னரும் தான் ஆரவ்வை உண்மையாக காதலிப்பதாக ஓவியா கூறிவந்தார். ஓவியா ஒரு தவறான நபரை தேர்வு செய்துவிட்டதாக அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தபோதிலும் ஓவியாவின் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்து ஆரவ்வை இதுவரை கடுமையாக விமர்சனம் செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் ஓவியா தனது டுவிட்டரில், 'நான் தற்போது சிங்கிளாக இருக்கின்றேன்' என்றும் 'மன திருப்தியுடன் இருக்கின்றேன்' என்றும் அறிவித்துள்ளார். இதனால் அவர் ஆரவ்வின் காதலை மறந்துவிட்டார் என்பது உறுதியாகின்றது. இந்த டுவீட் வந்த மறுநிமிடம் முதல் ஓவியா ஆர்மியினர் ஆரவ்வை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் ஓவியாவின் இந்த ஒற்றை வரி பதிவு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கண்சிமிட்டும் நேரத்திற்குள் லைக்குகளும் ரீடுவீட்டுக்களும் மின்னல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. அனேகமாக இந்த பதிவு உலக அளவில் சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.