close
Choose your channels

ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்: தற்கொலை முயற்சிக்கு விசாரணையா?

Friday, August 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்த போது திடீரென ஆரவ் உடனான காதல் தோல்வி காரணமாக மனத்தடுமாற்றத்துடன் காணப்பட்டார். ஒருகட்டத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று ஓவியாவிடமும் மற்ற பங்கேற்பாளர்களிடமும் விசாரணை செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நாசரேத்பேட்டை காவல்துறையினர் தற்போது ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்தபோது தற்கொலை முயற்சி செய்தது குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த சம்மன் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது குறித்து தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.