close
Choose your channels

'பாகுபலி' படக்குழுவினர்களை பாராட்டிய பாரத பிரதமர்

Monday, July 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வரும் 'பாகுபலி' திரைப்படத்திற்கு இதுவரை ரசிகர்கள் மற்றும் திரையுலக விஐபிகளிடம் இருந்து பாராட்டுக்களை கிடைத்து வந்தது. தற்போது இந்திய அளவில் உயர்பதவியில் இருப்பவர்களும் படக்குழுவினர்களை பாராட்டி வருகின்றனர்.

ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா உள்துறை அமைச்சர் நரசிம்மரெட்டி ஆகியோர் இந்த படத்தை சமீபத்தில் பாராட்டிய நிலையில் நேற்று முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் பிரபாஸ் உள்பட படக்குழுவினர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் உச்சகட்டமாக 'பாகுபலி' குழுவினர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமான பாரத பிரதமர் நரேந்திரமோடி, நேற்று படக்குழுவினர்களை நேரில் வரவழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்னும் 'பாகுபலி' படத்தை பார்க்கவில்லை. எனினும் விரைவில் அவர் 'பாகுபலி' படத்தை பார்க்க நேரம் ஒதுக்குவார்' என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி படக்குழுவினர்களை சந்தித்த தகவலை பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.