close
Choose your channels

மலேசியாவில் இருந்து சென்னை திரும்புகிறாரா ரஜினி?

Thursday, November 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரண்டு மாதங்கள் மலேசியாவில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் ஒரு சிறு விடுமுறையில் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து இந்த பண்டிகையை குடும்பத்தினர்களுடன் கொண்டாடுவதற்காக ரஜினி சென்னை திரும்பவுள்ளதாகவும், தீபாவளி முடிந்தவுடன் மீண்டும் மலேசியா சென்று படக்குழுவினர்களுடன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி சென்னை திரும்பினாலும் படக்குழுவினர் மலேசியாவிலேயே இருப்பார்கள் என்றும், ரஜினி திரும்பும் வரை ரஜினி அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.