close
Choose your channels

உ.பி. ரயில் விபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு கமல்ஹாசன் இரங்கல்

Sunday, August 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேசத்தில் நேற்று நடந்த ரயில் விபத்து ஒன்றில் 23 பே பலியாகினர் என்பதும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்த போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அந்த பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் தூக்கியெறியப்பட்டனர். மேலும் உத்கல் ரயிலின் ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததால் அந்த வீடும் சேதம் அடைந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மீட்புப்படையினர்கள், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதி மக்களும், தன்னார்வ தொண்டர்களும் மீட்புப்பணிக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், 'உத்கல் ரயில் விபத்து குறித்து அறிந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.