close
Choose your channels

ரஜினி பட பாடலாசிரியருக்கு விஷால் செய்த உதவி

Tuesday, April 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்தே நலிந்த நட்சத்திரங்கள் பலருக்கு நடிகர் சங்க நிர்வாகம் உதவி செய்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால் நடிகர் சங்கத்தின் மூலமும் தனது அறக்கட்டளை மூலம் பல நலிந்த நடிகர், நடிகைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் ஒருவருக்கு தற்போது விஷால் செய்த உதவி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' படத்தில் இடம்பெற்ற 'தலைமகனே கலங்காதே, தனிமை கண்டு மயங்காதே' என்ற பாடல் உள்பட 100க்கும் மேற்பட்ட திரையிசை பாடல்கள் எழுதிய காளிதாசன் என்ற பாடலாசிரியர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கபப்ட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஏழ்மை காரணமாக அவர் மருத்துவ செலவிற்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்த விஷால் அவருடைய மருத்துவ செலவிற்கு ரூ.25000 கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த பணத்தை விஷால் நற்பணி இயக்க செயலாளர் காளிதாசன் மனைவியிடம் கொடுத்துள்ளார். தாலாட்டு படத்தில் அறிமுகமாகி தேவா இசையமைத்த பல பாடல்களை எழுதியுள்ள காளிதாசனுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.