close
Choose your channels

சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு கைது வாரண்ட்

Tuesday, May 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்தி ஒன்று பிரபல பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில் தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததால், நடிகர் சங்கம் ஒரு கண்டனம் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கூட்டதில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சேரன், விவேக், சத்யராஜ், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை காரசாரமாக விமர்சித்தனர்.
நடிகர்களின் இந்த விமர்சனத்திற்கு எதிராக ரசாரியா என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நடிகர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீலகிரி நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை பலகட்டங்களாக நடைபெற்றபோது குற்றம் சாட்டப்பட்ட நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் சூர்யா, சரத்குமார் உள்பட யாரும் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நேரில் ஆஜரகாத நடிகர்கள் சூர்யா சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் தொடர்ந்து ஆஜராகாத நடிகர்களுக்கு அவர் தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த பிடிவாரண்ட் உத்தரவால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.