close
Choose your channels

நான் செல்லும் இடமெல்லாம் கோமியம் தெளிப்பீர்களா? பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

Wednesday, January 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரகாஷ்ராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியால் அந்த மேடை புனிதத்தன்மையை இழந்துவிட்டதாக கருதிய பாஜகவினர் அந்த மேடையை கோமியம் ஊற்றி கழுவியதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக மோடியை தன்னை விட சிறந்த நடிகர் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்

இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலம் சிர்சாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் வழக்கம்போல் பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் அங்கு வந்த பாஜகவின் இளைஞர் அமைப்பு, மேடையை பசுவின் கோமியம் ஊற்றி புனிதப்படுத்தினர். இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ், 'நான் செல்லும் இடம் அனைத்திலும் இதேபோல் கோமியம் தெளிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.