close
Choose your channels

ஆண் போராளிகள் அனைவரும் பொறுக்கிகள்: கவிஞர் தாமரை ஆவேசம்

Monday, July 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்த சமூக போராளி முகிலன் கடந்த 140 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முகிலன் கைதுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல திரைப்பட பாடலாசிரியை தாமரை, முகிலன் கைது குறித்து தனது ஆவேசமான கருத்துக்க்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான். இதுபோன்ற போலி போராளிகளை நிறைய பார்த்தாகி விட்டது.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும்.

கவிஞர் தாமரையின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.