close
Choose your channels

'2.0' திரைப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டம்

Thursday, November 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி உலகமே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் செய்துள்ளது. இவ்வளவு நேர்த்தியாக ஒரு படத்தை இந்தியர்களாலும், குறிப்பாக தமிழர்களால் தயாரிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் இரண்டு காட்சிகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது இந்த படத்தின் வசூலும் வெற்றியும் இதுவரை இந்திய சினிமா பார்க்காத வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 2.0 திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தை திரையிட கூடாது என்று கன்னட அமைப்பு ஒன்றின் தலைவரான வட்டாள் நாகராஜ் தலைமையில் '2.0' திரையிடப்பட்ட திரையரங்குகள் முன் கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.