close
Choose your channels

சுந்தர் சியின் அடுத்த படத்திற்காக ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட செட்!

Friday, November 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை’, ‘அரண்மணை 2’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது ‘அரண்மனை 3’ படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது.

கலை இயக்குநர் குருராஜ் கைவண்ணத்தில் உருவான இந்த செட்டில் நடைபெற்ற ஆக்சன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்தார். சுந்தர் சி படத்தில் பீட்டர் ஹெய்ன் முதல்முறையாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுந்தர்சியின் படங்களில் “ஆக்ஷன்” படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்த நிலையில் அந்த படத்திற்கு பின் இந்தப் படத்தில் தான் மிக பிரமாண்டமாக ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட்டில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

குஜராத் ராஜ்கோட், சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படம் 2021ல் சம்மர் ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

ஆர்யா, ராஷிகன்னா, சுந்தர் சி, ஆண்ரிரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சன்ட் அசோகன், மதுசூதன் ராவ்ம், வேல ராமமூர்த்தி, நளினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சத்யா இசையில் செந்தில்குமார் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.