close
Choose your channels

ஏ.ஆர்.ரஹைனா, ஜிவி பிரகாஷூக்கு சர்வதேச பதவிகள்!

Tuesday, February 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எக்ஸ்னோரா' அமைப்பின், சர்வதேச தலைவராக, பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா அவர்களும் இதே அமைப்பின் பசுமை தூதராக ஏ.ஆர்.ரஹைனா மகனும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1989ஆம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் எக்ஸ்னோரா நிறுவனம் சார்பில் நாளை காலை, 10:30 மணிக்கு, 'ட்ரி சேலஞ்ச்' என்ற பெயரில், மரம் நடும் நிகழ்ச்சி நடக்க உள்ளதாக இந்த அமைப்பின் நிறுவனர் நிர்மல் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் சர்வதேச தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹைனா, மற்றும் பசுமை துாதர் ஜி.வி.பிரகாஷ்குமார் நியமிக்கப்பட்டு உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.