close
Choose your channels

ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை வீட்டில் திடீர் சோதனை: பாலிவுட்டில் பரபரப்பு!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் மற்றும் பாலிவுட்டின் பிரபல நடிகை ஒருவர் வீட்டில் திடீரென சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் போதை பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் வாட்ஸ்அப் தகவல்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் இந்த சோதனையின் அடிப்படையில் ஷாருக்கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஆர்யன்கான் வாட்ஸ்-அப்பில் நடிகை அனன்யா பாண்டேவின் பெயரும் இருப்பதால் அவருடைய வீட்டிலும் போதைப்பொருள் அதிகாரிகள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ஷாருக்கான் மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இருவரது வீடுகளில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.