close
Choose your channels

'ஆடுஜீவிதம்' ரிலீஸ் நேரத்தில் நிகழ்ந்த எதிர்பாராத மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடித்த ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் வீட்டில் நிகழ்ந்த மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள நஜிப் என்பவர் அரபு நாட்டுக்கு வேலைக்காக சென்ற நிலையில் அவர் அங்கு ஒட்டகம் மேய்க்கும் வேலையில் அமர்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் அங்கிருந்து மிகவும் கஷ்டப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து கேரளாவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நஜிப் என்பவரின் கதையை கேள்விப்பட்ட கேரளா பிரபல எழுத்தாளர் ஒருவர் ’ஆடு ஜீவிதம்’ என்ற பெயரில் நாவலை எழுதியுள்ளார் என்பதும் மலையாளத்தில் மிக அதிகமாக விற்பனையான இந்த நாவல் திரைப்படம் தான் அதே பெயரில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்மை கதையை வைத்து தான் இயக்குனர் பிளஸ்ஸி என்பவர் ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நஜிப் அவர்களின் பேத்தி சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்து விட்டதாகவும் பிறந்து சில மாதங்களே ஆன இந்த குழந்தையின் மரணம் அவரது குடும்பத்தினரை நிலைகுலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி நஜிப் அவர்கள் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது தான் அவருக்கு மகன் பிறந்தான் என்பதும் தற்போது அவரது மகன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் தான் அவருடைய மகளும் இறந்து உள்ளார் என்பது காலம் செய்த சோகமான ஒற்றுமையாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.