close
Choose your channels

'ஆடுஜீவிதம்' இயக்குனர் பிளெஸ்சி என் படத்தில் நடித்துள்ளார். நடிகர் இயக்குனர் சசிகுமார் தகவல்..!

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிளெஸ்சி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் அமலாபால் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து நடிகர் இயக்குனர் சசிகுமார் அல்லது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் ஆடுதீவு தம் இயக்குனர் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் சசிகுமார் மேலும் கூறியிருப்பதாவது:

பிளெஸ்சி சாரும் பின்னே நானும்

சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் கிடைத்தது அவருடைய நட்பு. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். பெரும்பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.

திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம்.

பிளெஸ்சி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.