close
Choose your channels

பவர்ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

’லத்திகா’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்ததோடு, அந்த திரைப்படத்தை தயாரித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதன்பின் சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒரு சில படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில் ஒரு சில வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்குள்ளான பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போதும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு சற்று கவலையான செய்தியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.