close
Choose your channels

மனைவி, மகன்கள், பேரக்குழந்தைகளுடன் நடிகர் செந்தில்.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

Wednesday, March 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில் என்பதும் இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் செந்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மணிகண்டன் பிரபு, ஹேமச்சந்திரா பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் பிரபு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2008 மற்றும் 2015 ஆம் ஆண்டு செந்திலுக்கு இரண்டு பேர குழந்தைகள் பிறந்தனர்.

இந்த நிலையில் நடிகர் செந்தில் சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அபிராமி கோவிலில் தனது குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரது மனைவி ,மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் செந்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் ’கரகாட்டக்காரன் 2’ திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்திலும் செந்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.