close
Choose your channels

1461 நாள் ஆயிருச்சு.. நடிகர் சேதுராமன் நினைவு நாளில் மனைவியின் உருக்கமான பதிவு..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகர் சேதுராமனின் நினைவு நாளை அடுத்து அவரது மனைவி உமா தன்னுடைய சமூக வலைதளத்தில் அவரை பிரிந்து 1461 நாட்கள் ஆகிவிட்டது என்று உருக்கமாக பதிவு செய்துள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.

‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என்ற படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்த சேதுராமன் ஒரு மருத்துவர் என்பதும், கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த கடந்த 2000 ஆண்டு அவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதும் தெரிந்தது

சேதுராமன் மரணம் அடைந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்த நிலையில் அதன் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் சேதுராமன் நினைவு தினத்தில் உமா தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று மார்ச் 26 ஆம் தேதி அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு உமா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

நீங்கள் எங்களை விட்டு பிரிந்து இன்றுடன் 1461 நாள்கள் ஆகிவிட்டது. நீங்கள் எங்களுடன் இல்லை என்றாலும் நம்முடைய குடும்பத்திற்கு பெரிய தூணாக நீங்கள் தினமும் இருந்து வருகிறீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி நினைக்காத தினமே இல்லை என்று கூறலாம்.

உங்களைப் பற்றி நாங்கள் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களைப் பற்றி நினைத்தால் கூட எங்கள் முகத்தில் புன்னகை படர்கிறது. ஏதோ ஒரு ரூபத்தில் நீங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.