close
Choose your channels

விருது பெற்றதும் நடிகர் விஜய்சேதுபதி செய்த காரியம்… குவியும் பாராட்டு!

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“சூப்பர் டீலக்ஸ்“ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் விஜய்சேதுபதி, துணைநடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றார். இந்த விருதை பெற்றவுடன் அந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டு தற்போது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் “சூப்பர் டீலக்ஸ்“ படத்தில் “ஷில்பா“ எனும் கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்து சிறந்த பங்களிப்பை கொடுத்த நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

குடியரசு தலைவர் வெங்கைய நாயுடவிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்ட நடிகர் விஜய்சேதுபதி சென்னை திரும்பியவுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது தேசிய விருதுக்காக அளிக்கப்பட்ட கடிதத்தினை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா வாசித்துப்பின்பு அந்த விருதினை மீண்டும் நடிகர் விஜய்சேதுபதிக்கே கொடுக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களிடையே “மக்கள் செல்வன்“ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து தனது சிறந்த பங்களிப்பை செய்து வருகிறார். மேலும் ஹீரோ கேரக்டர் என்றில்லாமல் கதைக்காக எந்தக் கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் அசாத்தியத்தோடு அவர் வலம் வருவதும் ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.