close
Choose your channels

சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்திய பிரபலம்

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார் என்பதும் அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரை உலகிற்கே மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகளும், அனைத்து இந்திய திரை உலகினர்களும் அவரது மறைவிற்கு தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏற்கனவே சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் இல்லத்திற்கு சென்ற நிலையில் தற்போது நடிகர் விஷால், புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.